Wednesday, October 19, 2011

பாடல் 284: நன்மை மூலனே


    சரணங்கள்

1. நன்மை மூலனே - எம் நேய நாதனே,
    மைந்தர் பேரில் இந்த வேளை வந்திறங்குமேன்

2. போர் அதிகமாய் - சுவாமி மும்முரிக்குதே
    சோர்வடையா ஆவியை நீர் ஊற்றிக் காத்திடும்

3. ஆத்துமா மிக - சுவாமி தத்தளிக்குதே
    காத்து என்னை ஆற்றி இப்போ தேற்றிட வாரும்

4. துன்பம் வந்தாலோ - சுவாமி துயர மின்றியே
    இன்பமாய் நிலைத்து நிற்க வந்திறங்குமேன்

5. இருளாய்த் தோன்றுதே - சுவாமி அருளைத் தாருமேன்
    பரத்தின் ஜோதி எமக்குள் வீசக் கிருபை கூருமேன்

6. எந்தன் நம்பிக்கை - சுவாமி உம்மில்தான் ஐயா
    நம்பி என்னை முற்றுமாகத் தத்தஞ் செய்கிறேன்

1 comment:

  1. Sell your kidney in India with the sum of $500,000,00,For more info Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete