Tuesday, October 18, 2011

பாடல் 307: அன்பே! என்னாருயிரே


    பல்லவி

    அன்பே! என்னாருயிரே
    இன்பே! எனதரணே!

    அனுபல்லவி
 
    துன்பமுறு முலகில் தூயா! நீயே என் கோனே!
   
    சரணங்கள்

1. என்றும் உம்மை நேசிப்பேன்
    என் முழு பலத்தாலே,
    உந்தன் செயல்களையே
    நன்றாகத் தியானிப்பேனே - அன்பே

2. எத்தனை நாளாக நான்
    உத்தம வேந்தே! உமை
    பக்தியாய்ப் பணியாமல்
    கர்த்தா! உமை வஞ்சித்தேன் - அன்பே

3. தூய நல் மனதாலும்
    மாய மில்லாதன்பாலும்;
    நேய னுமை சேவிக்க
    தூய ஆவி தந்தாளும்! - அன்பே

4. அனாதியானவனே!
    அற்பன் மேல் அன்புற்றோனே!
    தினமு மும்மைப் பின் பற்ற
    தேவே எனையாக்குமேன்! - அன்பே

5. முச் சத்துருக்கள் என்னை
    அச்சமுறத் தாக்கையில்
    அட்சயன் இயேசு நாதா!
    பட்சமாய்க் காருமென்னை - அன்பே

6. இந்த நீதிப் பாதையில்
    உந்தனடி பின் சென்று
    சந்ததமுந் திடனாய்
    எந்தாய் நடக்கச் செய்வாய்! - அன்பே

7. பரன் உம்மைத் தேடாமலே
    நரகத்திற் கேகுவோரை
    விரைவில் நல்வழி சேர்க்க
    கரையு மென்னுள்ளம் அன்பால்! - அன்பே
                                                         K.S. Abraham

No comments:

Post a Comment