Saturday, October 22, 2011

பாடல் 270: அன்புள்ள என்னேசு


    பல்லவி

    அன்புள்ள என்னேசு நீரென் அருளுறவாமே!
    அருளுறவாமே! என தரும் மகிழாமே!

    சரணங்கள்

1. உந்தன் கிருபைதனையே உண்மையாய்ப் பற்றினேனையா!
    எந்தநாளும் உமது சேவை யான் செய்வேன் மெய்யே! - அன்பு

2. நம்பிக்கையால் காக்கப்பட்டு நானுன் பெலனையும் பெற்று
    தம்பிரானுனில் வாழ்கிறேன் தயக்கமே யற்று! - அன்பு

3. உள்வினையால் உருக்கப்பட்டேன் உன்னருளால் கழுவப்பட்டேன்;
    கள்ளப் பேயோடமர் புரிந்து கனஜெயம் பெற்றேன்! - அன்பு

4. வாரும் கிறிஸ்தேசு நாதா வந்தென்னுள்ளில் தங்கும் போதா!
    சீரடைந்தேனென்று சாட்சி சொல்லச் செய் நீதா! - அன்பு
                                                                                K.S. Abraham

No comments:

Post a Comment