Saturday, October 22, 2011

பாடல் 271: வந்து ஆவியே தங்கும்!


    இராகம்: கதனகுதூகலம் தாளம்: ஆதி

    பல்லவி

    வந்து ஆவியே தங்கும்! தங்கும் தாவியே,
    எந்த னாத்மந்தனில் இறங்கி இந்நாளில்!   
   
    சரணங்கள்

1. இயேசுவின் கிருபையால் சொந்தம் நீராகையால்
    மைந்தன் நம்பினேனே வந்தருளென் கோனே!
    எந்த னுள்ளமே ஏதேன் வனம்போல்
    எழிலுறப்பண்ணும் இயேசின் பலி எண்ணும்! - வந்து

2. தாபந்தமாய்த் தானே தவிக்கிறேன் நானே;
    பாவம் போக்குவையே பரிசுத்தாவியே!
    உந்தன் பதியாய் என்னுள்ளம் மெய்யாய்
    இருக்கச் செய் தேவே! இடர் நீக்கிக் கோவே! - வந்து

3. அலகைப் பாவமும் உலகப் பாசமும்
    அடியேன் துறக்க அருள்செய் சிறக்க
    என்று மெனதே உனதாவதே
    இன்றும் என்றும் நாதா எனையாளும் வேதா! - வந்து

4. தேவா! உம்மைப் பார்த்து ஜெபிக்கிறேன் காத்து
    தாரும் அருளுடன் ஜீவனும் எனக்கு
    நித்ய காலமும் சத்ய தேவனே
    பக்தரோடும் வீட்டில் சேரும் வானநாட்டில் - வந்து
                                                            K.S Abraham

No comments:

Post a Comment