Tuesday, October 18, 2011

பாடல் 304: இது நேரம் நீ வா கருணாகரா!


    இராகம்: செஞ்சுருட்டி தாளம்: ஆதி
   
    பல்லவி

    இது நேரம் நீ வா கருணாகரா!

1. பாதம் பணிந்தேன் நானே பாவிகள் நேயனே!
    இதயம் களிக்க விரைந்தே நீ வா! - இது

2. எங்கிருப்பேர் மூவர் எனைத் துதிப்பார்களோ
    அங்கிருப்பேன் என வாக் கீந்தாய் நீ - இது

3. உள்ளக் குறைகள் யாவும் தெள்ளி எமக்குரைக்க
    வள்ளலே! அடியாரிடை மகிழ்ந்தே! வா - இது

4. பண்டு அப்போஸ்தலர் பரன் உனைத் தேடவே
    அண்டங் குலுங்க எழுந்த விதமாய்! - இது

5. தாசர் இரட்சண்ய வழி சகலர்க்குங் கூறிட
    நேச சுத்தாவி தர நிமலா! நீ - இது

6. நம்பிக்கையோ டுந்தன் அன்பின் கரம் நோக்கி
    வெம்பி மன்றாடுகின்றோம் விரைந்தே! வா! - து

No comments:

Post a Comment