Saturday, October 22, 2011

பாடல் 254: வாருமையா சுவாமி வாருமையா


    பல்லவி

    வாருமையா சுவாமி வாருமையா - இப்போ
    தேவ ஆவியை ஊற்ற வாருமையா!

    சரணங்கள்

1. பெந்தெகொஸ்தென்னும் நாளில் வல்லமையாக வந்தீர்!
    சொந்தப் பிள்ளைகள் கூடிக் கெஞ்சும் இவ்வேளைதனில் - வாருமையா

2. மூவாயிரம் பாவிகள் மேலும் நீர் வந்திறங்கி,
    தேவா உம் வல்லமையைக் காட்டினாற் போல இப்போ! - வாருமையா

3. முன்னோர்க்கு ஆவியை நீர் அற்புதமாகத் தந்தீர்
    நன்மை மூலனே இப்போ தாரும் தவிக்கிறோமே! - வாருமையா

4. நின்று யுத்தம் செய்யவே உண்மையாய் ஏவுமையா!
    தன்னயத்தையே கொன்று முன்னே நடத்துமையா! - வாருமையா

No comments:

Post a Comment