Tuesday, October 18, 2011

பாடல் 289: ஜெப ஆவியை எம்மில் ஊற்றிட


    பல்லவி

    ஜெப ஆவியை எம்மில் ஊற்றிட வாரும்
    இயேசுவே! இது நேரமே
    இயேசுவே! என் நேசரே
    ஆத்தும அனுகூலரே!

    சரணங்கள்

1. இருளாம் நேரத்தில் அருளின் அம்பரா!
    இளைத்தபோதிலும் இரக்கமாய்
    இரத்தம் சிந்தினீர் சத்யமாகவே
    பக்தியாய் ஜெபித்தவா! - ஜெப

2. மண்ணோர் மன்றாட்டு விண்ணுக் கேகிட,
    விண்ணப்ப ஆவி வேண்டுமே;
    வல்லவா! எமை ஆள வா!
    பேயை வெல்லத் தா அருள் வல்லவா! - ஜெப

3. சுற்றும் சத்துரை முற்றாய் வென்று நாம்
    வெற்றி விருதுடன் உற்றேக;
    சொற்படியே நீர் கற்பியும்
    அற்பர் வாய்மொழி வென்றிட - ஜெப

4. பாவத்தால் வரும் சாபம் தீர்த்தவா!
    தாவியே உந்தன் பாதத்தை;
    பாதகர் தேட ஆவி ஊற்றிடும்
    கர்த்தனே! எங்கள் சத்யனே! - ஜெப

No comments:

Post a Comment