Sunday, October 16, 2011

பாடல் 327: நம் ஆண்டவரின் மகிமை


    We’ll shout aloud throughout the land - 782
                         (Tune 106 of ESB)

1. நம் ஆண்டவரின் மகிமை
    எங்கெங்கும் பாடுவோம்
    அவர் உதிர பெலத்தால்
    கொடி கீழ் போர் செய்வோம்

    பல்லவி

    ஜெயக்கொடியை உயர்த்துவோம்,
    அன்பின் இரட்சணியக் கொடியை;
    மரண மட்டும் போர் புரிந்து,
    பின் மேல் வீட்டைச் சேர்வோம்

2. மனிதரென்ன சொன்னாலும்
    இரட்சிப்பைக் கூறுவோம்;
    தேவனுக்கென்று போர் புரிந்தால்
    திடம் வெற்றி யடைவோம் - ஜெயக்

3. வீரரே நாம் தைரியமாய்
    எதிர்த்துப் போர் செய்வோம்;
    உலகமெல்லாம் தேவனுக்கே
    அடங்கும் மட்டுமே - ஜெயக்
                                          James C. Rateman

No comments:

Post a Comment