Tuesday, October 18, 2011

பாடல் 295: நம் வேலைகள் அதிகமாகிடும் போது


    He giveth more grace - 579
              (Tune 591, 592 of ESB)

1. நம் வேலைகள் அதிகமாகிடும் போது
    தம் மா கிருபையை அனுப்பிடுவார்
    வெந்துயர்கள் சோதனை பெருகிடினும்
    கிருபை சமாதானம் தந்திடுவார்

2. நம் பொறுமையை இழந்து சோர்ந்திடினும்
    நம் பலம் குன்றி நாட்கள் சென்றிடும் முன்;
    நம் ஜீவிய சம்பத்து தீர்ந்திடும் போது
    பிதாவின் ஈவு ஆரம்பமாகும் பார்!

3. எல்லையில்லா அன்பு அளவில்லா கிருபை,
    அந்தம் இல்லா பலம் மக்கள் காணுவார்;
    சம்பன்னர் இயேசு தம் களஞ்சியம் திறந்து,
    ஈந்திடுவார் இன்னும் ஈந்திடுவார்!
                                                        Annie Johnson Flint

No comments:

Post a Comment