Monday, October 17, 2011

பாடல் 313: வாருமையா போதகரே!


    இராகம்: சங்கராபரணம் தாளம்: ஆதி

    சரணங்கள்

1. வாருமையா போதகரே!
    வந்தெம்மிடம் தங்கியிரும்;
    சேருமையா பந்தியிலே
    சிறியவராம் எங்களிடம்

2. ஒளி மங்கி இருளாச்சே,
    உத்தமனே வாருமையா!
    களித்திரவு காத்திருப்போம்
    காதலரே வாருமையா!

3. ஆதரையில் எம் ஆதரவே
    அன்பருக்கு சதா உறவே;
    பேதையர்க்கும் பேரறிவே
    பாதை மெய் ஜீவ சற்குருவே

4. நாமிருப்போம் நடுவில் என்றீர்
    நாயகா உம் நாமம் நமஸ்கரிக்க;
    தாமதமேன் தயை புரிய
    தற்பரனே நலம் புரிவாய்

5. அமர்ந்திடுவீர் ஆசனத்தில்
    எழுந்திடுவீர் எம் நடுவில்;
    ஆசீர்வதித் தீந்திடுவீர்
    அன்புடனே அருள்மாரியை

No comments:

Post a Comment