Friday, October 14, 2011

பாடல் 337: தாசரே இத்தரணியை


    இராகம்: சங்கராபரணம் ஏகதாளம்: ஆதிதாளம்

    பல்லவி

    தாசரே இத் தரணியை அன்பாய்
    இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்

    அனுபல்லவி

    நேசமாய் இயேசுவைக் கூறுவோம்
    அவரைக் காண்பிப்போம்
    மாவிருள் நீக்குவோம் வெளிச்சம் வீசுவோம்

    சரணங்கள்

1. வருத்தப்பட்டுப் பாரஞ் சுமந்தோரை
    வருந்தியன்பாய் அழைத்திடுவோம்;
    உரித்தாய் இயேசு பாவப் பாரத்தை,
    நமது துக்கத்தை நமது துன்பத்தைச் சுமந்து தீர்த்தாரே - தாசரே

2. பசியுற்றோர்க்குப் பிணியாளிகட்குப்
    பட்சமாக உதவி செய்வோம்;
    உசித நன்மைகள் நிறைந்து,
    தமை மறந்து இயேசு கனிந்து திரிந்தனரே - தாசரே

3. நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
    நீசரை நாம் உயர்த்திடுவோம்;
    பொறுக்கவொண்ணா கஷ்டத்துக்குள்,
    நிஷ்டூரத்துக்குள் படுகுழிக்குள் விழுந்தனரே - தாசரே

4. இந்து தேச மாது சிரோமணிகள்
    விந்தையொளிக்குள் வரவழைப்போம்;
    சுந்தரக் குணங்களடைந்து அறிவிலுயர்ந்து
    நிர்ப்பந்தங்கள் தீர்ந்து சிறந்திலங்கிட - தாசரே
                                                                   வே.சா

No comments:

Post a Comment